காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரி மிக விரைவில் கொள்ளளவை எட்டும்
வினாடிக்கு 110 கன அடி தண்ணீர் வந்து சேர்கிறது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது இந்த ஏரி கடலூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது
இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் தஞ்சை மாவட்டம் கீழனையிலிருத்து இருந்து வடபார் வழியாகவும் மழைக்காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற
மழை செங்கால் ஓடை கருவாட்டு ஓடை வெண்ணங்குழி ஓடை உள்ளிட்ட வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வரும்
இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்
44 ஆயிரத்தி 835 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன
மேலும் வீராணம் ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப இங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில்
தற்போது கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது இந்த நிலையில் கீழனையிலிருந்து கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரி நீர்மட்டம் படிப்படியாக உயரமாக தொடங்கியது
தற்பொழுது ஏரியின் அளவு
45.65. அடியாக உள்ளது
தற்பொழுது வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 65 அடி உயர்ந்துள்ளது ஏரிக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது மேலும் ஏராளம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் மிக விரைவில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என தெரிய வருகிறது இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்