கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கோவை மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமானகோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுக்கரை கற்பகம் கல்லூரிக்கு சென்று அங்கு பயிலும் மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், கற்பகம் கல்லூரி முதல் மலுமிச்சம்பட்டி வரை போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தார்.

இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட காவல்துறையினரால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *