தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு மாணவ மாணவிகள் மத்தியில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடத்தப்பட்டது

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சின்னமனூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்கள் மத்தியில் போதை பொருளின் தீமைகளைப் பற்றி எடுத்துக் கூறினர் விழிப்புணர்வில் பள்ளியின் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற விழிப்புணர்வில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் போதை பொருள்களினால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறியபோது கேட்டறிந்தனர்

குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அலுவலர் நிவேதினி, தலைமையில், சமூக பணி சூர்யா பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராகவன் சின்னமனூர் காவல் நிலையசார்பு ஆய்வாளர் மூவேந்தன் மற்றும்மனநல ஆலோசகர் முன்னிலையில் நடைபெற்றது,போதை பொருள் விழிப்புணருக்கு சிறப்பு அழைப்பாளராக மார்க்கையன்கோட்டை பேரூராட்சி தலைவர் முருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நல்வழிப்படுத்தும் வகையில் பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *