சேகரை ஸ்ரீமஹாமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு நீர் , மோர் வழங்கி தாகத்தை தணித்த இஸ்லாமிய நண்பர்கள் பொதுமக்கள் பாராட்டு…

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த சேகரை கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீமஹாமாரியம்மன் ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைதொடர்ந்து கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களிடேயே சமுக நல்லிணகத்தை ஏற்படுத்தும் வகையில் பொதக்குடியில் உள்ள கூல் நண்பர்கள் என்ற இஸ்லாமிய நண்பர்கள் நீர் , மோர் , ரோஸ் மில்க், வெள்ளரி உள்ளிட்ட பொருட்களை வழங்கி பக்தர்களுக்கு தாகம் தனித்தனர்.

இந்து கோவில்களில் நடைபெறும் இவ்விழாக்களில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நீர், மோர் உள்ளிட்டவைகளை வழங்கிய சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரிடத்திலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *