சோழவந்தான்

சோழவந்தான்அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருகிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் மற்றும் ஊட்டசத்து வேளாண்மை சமச்சீர் உரப்பயன்பாடு குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது இம்முகாமில். மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர். (மத்திய திட்டம்) அமுதா..தலைமை தாங்கினார்.

வேளாண்மை துணை இயக்குனர். ராணி. பிரதம மந்திரியின் கௌரவ திட்டம் பற்றியும்.வேளாண்மை உதவி இயக்குனர். பாண்டி மத்திய மாநில அரசுகளின் விவசாயிகளுக்கான திட்டம் மற்றும் மானியங்கள் குறித்தும்.

வேளாண் அலுவலர் பானூமதி. உரம் பயன்படுத்துமுறை பசும்தாள் இலைகள் உரமாக்கி பயன்படுத்துவதால் ஏற்றபடும் நன்மைகள் குறித்தும்.நடமாடும் மண் பரிசோதனை நிலைய அலுவலர் சோபியா ஜேஸ்பின் நிர்மலா மண்மாதிரி எடுத்தால் அதன் பயன்பாடுகளுக்கு கேற்ற உரமிடல் பற்றியும் வேளாண்மை துணை அலுவலர் சத்தியவாணி வேளாண் விரிவாக்க மையத்தில் இடுபொருள் உயிர் உரங்கள் இருப்பு பயன்பாடு பற்றியும் விரிவாக பேசினார்கள்

இப்பயிற்சி முகாமில் வேளாண் உதலி அலுவலர்கள் தங்கையா விக்டோரியயா செலஸ் மற்றும் வேளாண் பணியாளர்கள் பெருமாள். பூமிநாதன் அருணாதேவி. விவசாயிகள் எனபலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *