சர்வதேச நீதி நாள் சம்மந்தமாக சட்ட விழிப்புணர்வு முகாம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்ட்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் M.தங்கம்மாள்புரம் கிராமத்தில் சர்வதேச நீதி நாள் குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மேற்படி முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை சேர்ந்த பட்டியல் வழக்கறிஞர் S.தமிழ் செல்வி அவர்கள் தலைமை தாங்கினார்..

பட்டியல் வழக்கறிஞர் தனது தலைமை உரையில் சர்வதேச நீதி நாள் எப்படி உருவானது என்பது பற்றியும், இலவச சட்ட உதவி மைய செயல்பாடுகள் குறித்தும், அரசு நலத்திட்டத்தை எவ்வாறு பெறுவது குறித்தும், குழந்தைகளுக்குசெல்ஃபோன் பயன்பாட்டில் உண்டான ஆபத்து குறித்தும், பெண்கள் தங்கள் குடும்ப வாழ்வில் உருவாகும் பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு தங்களை காப்பாற்றுவது குறித்து விளக்கமாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

மேற்படி முகாமில் 50- க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுக்கு உண்டான சட்டம் சம்மந்தமான கேள்விகள் கேட்டு அதற்கு உண்டான பதிலை கேட்டு பயன் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *