குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அசூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் திரு தேர் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது
சந்தன காப்பு கட்டி சக்தி அழைத்தல் தொடங்கி தினமும் ஶ்ரீ முத்து மாரியம்மனுக்கு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன பின்னர் தினமும் சாமி திருவீதி உலா நடைபெற்றது.ஒன்பதாம் நாளான
ஸ்ரீ முத்து மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீ முத்து மாரியம்மன் மேள தாளங்கள் வெடிகள் முழங்க தேரடிக்கு கொண்டுவரப்பட்டது. சுமார் 1000 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று மாலை தேர் கோயிலின் நிலைக்கு வந்து நிறுத்தப்பட்டது
இத்தரோட்டத்தில் தண்டை மேளம் முழங்கஉலா வந்தன இந்த தேரோட்டத்தில் குன்னை, அந்தூர், சித்தளி, எழுமூர், ஆய்குடி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் குன்னம் போலீசார் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் இருந்தனர் விழா ஏற்பாடுகளை கிராம மூக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.