ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில்,மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.07.2024 செவ்வாய்கிழமை அன்று நடைபெற உள்ளது –

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா தகவல்.

மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு கலைந்திடுவதற்காக வருவாய் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையிலும் மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு கலைந்திடுவதற்கு 23.07.2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்; தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *