24 பதக்கங்கள் வென்று மதுரை மாணவர்கள் சாதனை

மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் சர்வதேச ஸ்பீட் பவர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 19 ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா உட் பட 10 நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். பூம்சே, கியொருகி மற்றும் ஸ்பீடு கிக்கிங் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் திக் அமெச்சூர் மதுரை மாவட்ட விளையாட்டு டேக்வாண்டோ சங்கம் சார்பில் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்கள் 4 தங்கம், 7 வெள்ளிமற்றும் 13 வெண்கலம் என 24 பதக்கங்கள் வென்றனர். கியொருகி பிரிவில் ஷெரின் ஜெகனரா, ரோகித் பாலன், உதய கிருஷ்ணன் ஆகியோர் வெண்கல பதக்கம்,பெற்றனர்.

கார்த்திக் ஸ்ரீராம், நாராய ணன் வெள்ளி பதக்கம், ஜெயசிம்ம விருமன், நிகில், கீர்த்திவாசன், முத்து ஹரிஷ், கிறிஸ்டியானோ அன்டன் ஜாய்சிங் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.

பூம் சே பிரிவில் ஷெரின் ஜெகனரா, ஜெய சிம்ம விருமன், உதய கிருஷ்ணன், பிரகாஷ்குமார் ஆகியோர் தங்கமும், கீர்த்திவாசன், ரோஹித் பாலன், கிறிஸ்டியானோ அன்டன் ஜாய்சிங், கார்த் , ரகுராமன் வெள்ளி பதக்கமும், நிகில், நாராயணன், கார்த்திக் ஸ்ரீராம், விஜய் அருணாச்சலம் ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்றவர்களை போட்டி ஒருங்கிணைப்பாளர் தத்தோ கிராண்ட் மாஸ்டர் பாலா மற்றும் டேக்வாண்டோ தலைமை பயிற்சியாளர் நாராயணன் பாராட்டி பரிசு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *