பெரம்பலூர் மாவட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்க 70வது ஸ்தாபன ( துவக்க நாள்) விழாவை முன்னிட்டு சுமார் ஏழு இடங்களில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது
முதலில் மாவட்ட அலுவலகத்தில் முதல் கொடியேற்று தொடங்கின பின்னர் பெரம்பலூர் 4 ரோடு, முருக்கன்குடி, வதிஷ்ட்டபுரம். நொச்சிக்குளம், 36, எறையூர், மேலமாத்தூர், உள்ளிட்ட இடங்களில் குடியேற்றி நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சிவராஜ் தலைமைதாங்கினார் இதில் மாவட்ட செயல் தலைவர் சிவம் செந்தில்குமார் வரவேற்றார் இந்நிகழ்வு மாவட்ட செயலாளர் ஏ .கே . செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் எஸ். மணிவேல் ஜீ கலந்து கொண்டு கொடியினை ஏற்றினார்.
மேலும் நிகழ்ச்சிகளில் மாவட்ட பொருளாளர் அமுதா கர்ணன்.மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி.மாவட்ட துணை தலைவர்கள். தமிழரசன்.குழந்தைவேல். மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தராஜ்.தர்மலிங்கம். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஆறுமுகம்.செல்வம் .எம் ஆறுமுகம்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.