திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு முன்பகை காரணமாக 6 வயது சிறுவனை கொலை செய்த நத்தம் கோட்டையூர் சின்னையம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜய் ரத்தினம் (22) என்பவரை நத்தம் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப்., இ.கா.ப., அவரது அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.தங்கமுனியசாமி அவர்கள், நீதிமன்ற முதல்நிலைக் காவலர்.சண்முகவேல் மற்றும் அரசு வழக்கறிஞர்.ஜோதியின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி அஜய் ரத்தினம் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *