திண்டுக்கல் மாவட்டத்தில், 306 கிராமப்புற ஊராட்சி பகுதிகளில் 11.07.2024 முதல் 23.08.2024 வரை 23 நாட்கள் 68 முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டு, 11.07.2024 முதல் ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

அதன்படி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், எ.வெள்ளோடு ஊராட்சியில் விஎம்கே கல்யாண மண்டபம், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், காந்திகிராமம் ஊராட்சியில் தம்பிதோட்டம் மேல்நிலைப்பள்ளி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், வில்வாதம்பட்டி ஊராட்சியில் தொப்பம்பட்டி வேலு மஹால் ஆகிய இடங்களில் ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *