பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழர் பண்டிகையின் மிகச் சிறப்பாகும். தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் தமிழக முதல்வர் தளபதி அவர்கள் ,இந்த பொங்கல் திருநாளை திராவிட பொங்கலாக- சமத்துவ பொங்கலாக- தமிழர்கள் மதத்தால் வேறுபட்டாலும் இனத்தால் ஒன்று பட்டவர்கள் என்று கருதி -கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் உழவர் திருநாளை போற்றி !காணும் திருநாளில் அனைவரும் ஒன்று கூடிகளிப்போம்!! திராவிடம் தழைக்க உழைப்போம் !!வரும் தேர்தலில் கழக ஆட்சி மலர உறுதி ஏற்போம்!! எனக் கூறி புதுச்சேரி மாநிலத்தில் வாழும் அனைவருக்கும் எனது இனியபொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.