திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் சார்பில் தேசிய நூலகர் தினவிழா கிளை நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வுபெற்ற பிடிஓ எஸ். அப்பாண்டைராஜன் தலைமை தாங்கினார்.

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை நூலகர் சத்ய நாராயணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஆ. மயில்வாகனன் பங்கேற்று புத்தகங்களை வாசிப்போம் மனிதர்களை நேசிப்போம்… ! என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் புத்தக வாசிப்பே வாழ்க்கையை மேம்படுத்தும் வழியாகும் என்று வலியுறுத்தினார்.

மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன், தமிழ்ச் செம்மொழி மன்ற நிர்வாகி மு. பிரபாகரன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி, கற்க கசடற அமைப்பு நிர்வாகி இரா. பாஸ்கரன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது, பாரதமாதா மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜலட்சுமி, கலைஞர் தமிழ்ச் சங்கம் வந்தை குமரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக, நூலகத் தந்தை எஸ்.ஆர். அரங்கநாதன் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதியில் நூலக உதவியாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *