பொள்ளாச்சி –

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பாவூர் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் டோனி. இவருக்கு சொந்தமான மாந்தோப்பு தமிழக கேரள எல்லை பகுதியான கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி கிராமத்தில் உள்ளது.

இவரது தோட்டத்தை சபீஸ் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். இவர் தோட்டத்தில் எரிசாரயம் பதுக்கி வைத்திருப்பதாக கேரள மாநிலம் கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கேரளா தமிழக போலீஸ் உதவியுடன் கேரள கலால் துறை துணை கமிஷனர் ராகேஷ் தலைமையிலான குழு மருத்துவர் டோனியின் தோட்டத்தில் சோதனை செய்துள்ளனர்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 150 கேன்களில் 4500 லிட்டர் எரிசாரயம் இருந்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தோட்ட உரிமையாளர் மருத்துவர் டோனியிடம் விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்ட எரிசாரயதை கேரள போலீசார், ஆனைமலை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் தப்பி ஓடிய சபீஸ் என்பவரை போலீசார் தேடிவரும்போது, சபீஸ் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடல் கொல்லங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ளது எனவும் தெரிவித்தனர்,

இந்த சம்பவம் குறித்து ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எரி சாரயம் பிடிபட்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *