திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று உலக ஓசோன் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு இறைவழிபாடு கூட்டத்தில் ஓசோன் பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல்கள் விளக்கப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியர் என்.அனந்தராஜன் தலைமையில் உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். பிறகு தலைமை ஆசிரியர் ஓசோன் படலம் என்பது பற்றிய விழிப்புணர்வு தகவல்களையும், சுற்றுப்புற சூழ்நிலை காரணமாகவும், அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் நிலைகளை பட்டியலிட்டு பேசினார். ஓசோன் பாதுகாப்பு பற்றிய மாணவர்களின் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *