திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல் பழனி பைபாஸ், கொட்டபட்டி பிரிவு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த டாட்டா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் ரேஷன் அரிசி கடத்தி வந்த திண்டுக்கல் ஜம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல்(36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா சுமோ கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *