திண்டுக்கல் மாவட்டம்
காந்தி ஜெயந்தி அன்று கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர்.பூங்கொடி இ.ஆ.ப.தகவல்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி (02.10.2024) கிராம சபைக் கூட்டம் முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது.

இக்கிராம சபைக் கூட்டத்தில், கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் 01.04.2023 முதல் 31.03.2024 வரையிலான 2023-2024-ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கைக்கு கிராமசபை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் முதலான பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து 306 கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில், தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். 61601 மாவட்ட ஆட்சித்தலைவர்.பூங்கொடிதெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *