திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த கட்சி தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.இவ்வாலயத்தில் வருடம் தோறும் நவராத்திரி திருவிழா கொழு அலங்காரத்துடன் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்.
அதேபோன்று இவ்வாண்டுநேற்று முன் தினம் (ஏழாம் தேதி) திங்கட்கிழமை மாலை அம்மன் ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்தார்.நிகழ்ச்சியின் உபயதாரர் கீழ சேத்தி ஜி. ராஜேந்திரன் குடும்பத்தினர்,வலங்கைமான் ஆர்.கலியமூர்த்தி மற்றும் நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நேற்று (எட்டாம் தேதி) செவ்வாய்க்கிழமை மாலை அம்மன் ஸ்ரீ அம்மன் தவக்கோலம் அலங்காரத்தில் காட்சியளித்தார்.நிகழ்ச்சியின் உபயதாரர் வலங்கைமான் முத்து சைக்கிள் கம்பெனி எஸ் மூர்த்தி அண்ட் சன்ஸ் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
தினந்தோறும் மாலை வேளையில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதேபோன்று வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நேற்று முன் தினம் (ஏழாம் தேதி) திங்கட்கிழமை மாலை அம்மன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்தார். நிகழ்ச்சியின் உபயதாரர் வலங்கைமான் சீதாளா தேவி லாரி சர்வீஸ் எஸ். டி.என். மேகநாதன்,சிவா மெடிக்கல் டி. சிவராஜ் சிறப்பாக செய்து இருந்தனர். நேற்று (எட்டாம் தேதி) மாலை அம்மன் ஸ்ரீ அம்மன் தவக்கோலம் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
நிகழ்ச்சியின் உபயதாரர் வலங்கைமான் சித்தன் துரை ரோடு வி.ஏ.வி. குருமூர்த்தி குடும்பத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர். இதேபோன்று வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மாரியம்மன் ஆலயத்தில் கடந்த இரண்டு நாட்களாக அம்மன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ அம்மன் தவக்கோலம் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் எஸ். ராஜராஜேஸ்வரன், தக்கார்/ஆய்வர் க. மும்மூர்த்தி,அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள்,உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.