செய்தியாளர் ச. முருகவேலு
புதுச்சேரி
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் கண்டமங்கலம் ஜீவா திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல். கே. கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி முன்னிலை வகித்தார்.

விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றி ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.எதிர் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் மூன்றாம் தலைமுறையாம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து அயராது பாடுபட வேண்டும். 2.வரும் 17ஆம் தேதி கழகத்தின் 53 வது ஆண்டு துவக்க நாளான அன்று நமது ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களில் உள்ள கொடிக்கம்பங்களை புதுப்பித்து கழகக்கொடி ஏற்றி கழகக் கொள்கை விளக்க பாடல்களை ஒளிபரப்பி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும்.3. விழுப்புரம் நாகப்பட்டினம் சாலையில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணியானது ஆமை வேகத்தில் நடைபெறுவதோடு கடந்த எட்டு மாத காலங்களாக அந்த சாலை மூடப்பட்டுள்ளதால் அந்த பகுதியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள் இதற்கு காரணமான மைனாரிட்டி மோடி அரசையும் அதற்கு துணை போகும் ஸ்டாலின் அரசையும் இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எம் ஆர் தமிழ் மணி தகவல் தொழில்நுட்ப பிரிவு கௌதம் சம்பத் ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் ராஜ்குமார் விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ் என்கின்ற சுரேந்திரன் சின்னபாபு சமுத்திரம் கிளை கழக செயலாளர் பத்மநாபன் கண்டமங்கலம் கிளை செயலாளர் அசோக் உட்பட அதிமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர் கலந்துகொண்ட அனைவருக்கும் வடை, பாயாசத்துடன் மதிய உணவு பறிமாறப்பட்டது.