திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் – நீடாமங்கலம் சாலையில்அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளார் மல்லிகா (பொ) உத்தரவின் பேரில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.
பருத்தி ஏலத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியினை கொண்டு வந்தனர். சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இரண்டு வியாபாரிகள் கலந்து கொண்டனர். வருத்தி அதிகபட்ச விலை ஆக குவிண்டால் ரூபாய் 6,499 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூபாய் 5 ஆயிரத்து 359க்கும்,சராசரி விலையாக குவிண்டால் ரூபாய் 5,968 க்கும் ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 25.38 குவிண்டால் பருத்தி ரூபாய் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 317 க்கு ஏலம் போனது.