தென்காசி மாவட்டம் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் ஆலங்குளம் வட்டத்தில் நடைப்பெற்றது.
இத்திட்டத்தின் கீழ் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கனகம்மாள் , தலைமையில் கீழ் கடங்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தேன்ராஜ் முன்னிலையில்
கடங்கனேரி ஊரட்சி அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் , நியாவிலைகடை அங்கன்வாடி மையம் கிராம கமிட்டி மேல்நிலைபள்ளி, கடங்கனேரி சரஸ்வதி வித்யாசாலை , நெல்களம் , கழிவுநீர் சுத்திரிப்பு தொட்டி,மற்றும் கடங்கனேரி, வெங்கடேஸ்வரபுரம் பல்வேறுஇடங்களை கள ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தனர்.
இதில் கிராம நிர்வாக அலுவலர் அம்மையப்பன், துணை தலைவர் தங்க கிருஷ்ணன்,உதவி வேளாண்மை அலுவலர் கணேசன், ஊராட்சி செயலர் குமார்,ஆலங்குளம் ஒன்றிய தட்டச்சர் மாணிக்க செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.