துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அதிமுக நகர கழகம் சார்பில் நகர செயலாளர் அமைதி பாலு தலைமையில் அதிமுக துவக்க நாள் விழா கொண்டாடப்பட்டது.

பேரறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு திமுகவில் இருந்து பிரிந்து வந்த எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அண்ணாவின் மீது உள்ள பற்றால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி நிறுவினார்.அதிமுக கட்சி துவங்கி 52 வருடம் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, துறையூர் நகர செயலாளர் அமைதி பாலு தலைமையில் 53ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.

இதில் வடக்கு மாவட்ட செயலாளர் மு பரஞ்ஜோதி கலந்துகொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதில் முன்னாள் எம்எல்ஏ கழக இணை செயலாளர் இந்திரா காந்தி, எம் ஜி ஆர் மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், விவசாய பிரிவு மாவட்ட செயலர் பொன் காமராஜ், சிறுபான்மை பிரிவு புல்லட் ஜான், பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன், நகர அவைத்தலைவர் ரவிவர்மா, வடக்கு ஒன்றிய செயலாளர் சேனை.செல்வம், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் ராம்மோகன், பேரூர் கழக செயலாளர்கள் ராஜாராம், ராஜேந்திரன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் முன்னாள் நகர செயலாளர் கவிதை மணி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர்கள் கே தீனதயாளன் (நகர்மன்ற உறுப்பினர்) , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி எம் சிவபொன்னன்,18வது வார்டு டாஸ்மாக் ராமு, சங்கர்,நகர இணை செயலாளர் சந்திரா, மாவட்ட பிரதிநிதிகள் கண்ணதாசன், மருதமுத்து ,பொருளாளர் கருணாகரன், உப்பிலியபுரம் முன்னாள் ஒன்றிய சேர்மன் மைவிழி அன்பரசன்,வர்த்தக அணி மாவட்ட தலைவர் ராயல் பாஸ்கர், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் விவேக், இளைஞர் பாசறை செயலாளர் ஆதித்ய வர்மா,எம்ஜிஆர் இ.மா.து செயலாளர் வடிவேல், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணை செயலாளர் ரவி,முத்து குமாரலிங்கம்,அபி இளங்கோவன்,சிவசாந் மனோகரன் ,விஜயரங்கன், பாஸ்கர், கருப்பையா,ஐடி விங்க் தினேஷ், கணேஷ் மற்றும் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *