திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்திற்கு எதிர்ப்புறம் உள்ள வலங்கைமான் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பொது சுகாதார வளாகம் கடந்த சில மாதங்களாகவே பூட்டி கிடக்கிறது. இதனால் மகாமாரியம்மன் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள், பெண்கள், இங்கு உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வருகின்ற பெண்கள், பொதுமக்கள் அவசர உபாதைகளுக்கு பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இப்பகுதியில் வேறு பொது சுகாதார வளாகம் இல்லாத நிலையில் ஆலயத்திற்கு வரும் பக்தர்களும், பெண்களும், பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பெண்கள், பொது மக்களும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஆலயத்திற்கு எதிர்ப்புறம் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து,அடர்ந்து வளர்ந்து கிடக்கும் புல் காடுகளை அகற்றியும், வளாகத்திற்கு செல்லும் சாலையை சீரமைத்தும்,அங்கு உள்ள அனைத்து மின் விளக்குகளையும் சீரமைத்தும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *