மதுரையில் மாநில அளவிலான தேசிய பேரிடர் மேலாண்மை
பயிற்சிமுகாம்….

தேசியபேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
மதுரை எல்லீஸ் நகரில் நடைபெற்றது. மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமை மேயர் இந்திராணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாமன்ற உறுப்பினர் பாமா முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை முதன்மை பயிற்றுநர்களான ஜோசப் சகாயம், சுரேஷ் மரிய செல்வம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் மேலாண்மை பிரதிநிதியான ஜோ ஜார்ஜ் ஆகியோர் பயிற்றுவித்தனர் வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப் பாளர் இராஜன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை வைகை டிரஸ்ட் விஸ்வ யுவகேந்திரா (நியூடெல்லி) ஆகியவை ஒருங்கிணைப்பு செய்தன. வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாதுரை மற்றும் விஸ்வ யுவகேந்திரா நிறுவனத் தலைவர் ரஜத்தாமஸ் ஆகியோர் துவக்க உரையாற்றினர்.

சிறப்பு விருந்தினர் களாக டாக்டர் நாராயணன், வழக்கறிஞர் அழகேசன், எஃப்.ஏ.ஐ மேலாளர் டாக்டர் பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோலை பரமன் நன்றியுரை கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *