அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15B.மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ கழுகுமுனீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அதனை தொடர்ந்து முதல் கால யாகவேள்வி ஆரம்பமாகி மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டு கால யாகபூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வளம் வந்து பின் கோவில் கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீ கழுகு முனீஸ்வரருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை காஞ்சாராம்பேட்டை பிரவீன், மற்றும் வழக்கறிஞர்கள் வினோத்பாலன், சந்திரன், பண்ணைகுடி மைனர்ராமச்சந்திரன், பேங்க்காலனி குமார் பட்டர், அழகர்சாமி பூசாரி, மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்