கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கேர் -டி அறக்கட்டளை சார்பாக அங்கு பயின்று வரும் பயனாளிகளுக்கு மனித வள மேம்பாட்டு பயிற்சி வகுப்பு கேர் – டி அறக்கட்டளையின் இயக்குனர் சி. மா பிரித்வி ராஜ் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் முன்னதாக வால்பாறை கேர் டி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்

சிறப்பு விருந்தினராக பிஃப்த் வீல் டிரைவ் இயக்குனர் வெங்கடேசன் தங்கவேலு மற்றும் கேர் – டி இயக்குனர் சி. மா பிரித்வி ராஜ் கலந்து கொண்டு சுய விழிப்புணர்வு, ஒத்துணர்வு, ஊக்கம், தகவல் தொடர்பு திறன், பகுப்பாய்வு சிந்தனை, குழு பணி மற்றும் தலைமை பண்பு, போன்ற பாடங்கள் உட்பட 10 பாடங்கள் பயனாளிகளுக்கு கற்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பயனாளிகள் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர். வெகு சிறப்பாக நடைபெற்ற இப்பயிற்சியில் திரளான பயனாளிகள் கலந்து கொண்ட நிலையில் தையல் ஆசிரியர் ஞானத்தாயுடன் சமூக பணியாளர் கார்த்திகா நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *