செங்குன்றம் செய்தியாளர்

செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் முன்பு இறந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்.

சென்னை அடுத்த வல்லூர் செங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 44) இவர் எண்ணூர் அருகே லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி மாலை தனது வேலையை முடித்துவிட்டு அப்பாச்சி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் வழியில் அத்திப்பட்டு புதுநகர் மேம்பாலம் அருகில் இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வேன் இவரது இரு சக்கர வாகனத்தில் மோதிவிட்டு அங்கிருந்து மறைந்தது.

பின்னர் பலத்த காயத்துடன் தலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை காப்பாற்ற அருகில் உள்ளோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அப்போது மருத்துவமனை போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நெடுஞ்சாலையில் உள்ள கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி அலைந்தனர் .

இந்த நிலையில் இறந்தவரின் உறவினர்கள் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மூன்று நாட்களாகியும் உடலை வாங்க மறுத்து விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்தால் ஒழிய உடலை வாங்க மாட்டோம் என ஆக்ரோஷத்துடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்

இறந்த பிரபுவிற்கு அபிராமி என்ற மனைவியும் 11 வயதில் ஒரு மகளும் 13 வயது ஒரு மகனும் அரசு பள்ளியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *