சத்தியமங்கலம் அருகே உள்ள தனவாசியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக் கோயில் வளாகத்தில் 16 டன் எடையுள்ள கல்லில் 18 அடி உயரத்தில் 100008 சிவலிங்கள் வடிவமைக்பட்ட சிவலிங்கம் சிறப்பு பூஜைகள் செய்ப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, பூ மாலை அணிவித்து சென்டைமேள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பிரதிஷ்டை நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இங்கு ஏற்கனவே, சிவன் அடியார்கள் தானம் கொடுத்த ஏராளமான சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *