சித்தேரி மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் தார் சாலை துண்டிப்பு குறித்து அரூர் அதிமுக எம்.எல்.ஏ சம்பத்குமார் ஆய்வு

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலைவாழ் பகுதியில் 62 கிராம சேர்ந்த 11,264 குடும்பத்தைச் மலைவாழ் மக்கள் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றன .

இப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் அத்தியாவசிய பணிக்கு சாலை பயன்படுத்தி வந்தன கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த ஃபெஞ்சல் புயல் காரணமாக சித்தேரி சாலை மண் சரிந்து துண்டிப்பானது

அதன் பிறகு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதனை அடுத்து இன்று அரூர் அதிமுக எம்எல்ஏ வே..சம்பத்குமார் துண்டிப்பான சாலை குறித்து ஆய்வு செய்தார் ,

தமிழக அரசு வனச் சட்டம் நெடுஞ்சாலை துறை ஆகியோர் இணைந்து இப்பகுதியை இருவழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் , கடந்த நான்கு நாட்களாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர் , தமிழக அரசு உடனடியாக இருவழி சாலையாக மாற்ற வேண்டும் என சித்தேரியை சேர்ந்த அழகேசன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ஆர். பசுபதி, அதிமுக தர்மபுரி மாவட்ட துணை செயலாளர் சண்முகம் சந்தோஷ்,சித்தேரி முன்னாள் தலைவர் அழகேசி உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *