பெரியகுளம்: டிச: 6:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும் , மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 8ம் ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க முன்னாள் தேனி பாரளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் அலுவலக வளாகத்தில் வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்திற்கு தேனி மாவட்ட கழக செயலாளர் சையது கான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் மஞ்சுளா, பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் செல்லமுத்து, நகர் கழக செயலாளர் அப்துல் சமது, நகர் கழக துணைச் செயலாளர், ஓ. சண்முகசுந்தரம், ஜெயப் பாண்டியன், கு.நாராயணன்
வி.டி.ஸ்.ராஜவேலு, சந்தோசம், கீழவடகரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், மாவட்ட பிரதிநிதி அன்பு, ஜின்னா முத்துப்பாண்டி மற்றும் வார்டு கழக செயலாளர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.