தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பெரியகுளம் நகர் கழகம் சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 8 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

பெரியகுளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு நகர் கழக செயலாளர் C.பழனியப்பன் தலைமையில் அஇஅதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.

இந்நிகழ்வில் கழக மாவட்ட இணைச் செயலாளர் முத்துலட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவீரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைச் செயலாளர் துரைபாண்டி, மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் முகமது சலீம், கணேசன், விஜய் ஆனந்த் மற்றும் நகர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிரவாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *