வலங்கைமானில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு தின வீரவணக்க உறுதிமொழி….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வலங்கைமானில்
எழுச்சித் தமிழர் ஆணைக்கிணங்க , திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் இர.தமிழோவியா அவர்களின் வழிகாட்டுதலின்படி
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.
வலங்கைமான் நகர செயலாளர் ஜீவா தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட அமைப்பாளர் வாசு, வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் இராதா, மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பாலை. அரச முதல்வன் , முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் கோபிநாத், இளைஞ்சிறுத்தை கிருபா, லயம் பிரகாஷ் ,திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக ஒன்றிய செயலாளர் அன்பரசன், வலங்கைமான் நகர செயலாளர் சேர்மன் சிவனேசன் மற்றும் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *