வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்ச மங்கலம் ஊராட்சியில் தேனி வளர்ப்பு குறித்த பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரத்தில் 2024-25- ஆம் ஆண்டிற்கான வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை-மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சியில் தேனி வளர்ப்பு குறித்து ஆதிச்ச மங்கலம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆதிச்ச மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் துர்கா தேவி வைரவேல் மற்றும் முன்னோடி விவசாயிகள் சிவசங்கர், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேனீ வளர்ப்பில் அனுபவம் மிகுந்த விவசாயிகளான குடவாசல் வட்டார விவசாயி பிரபாகரன், தஞ்சை மாவட்ட விவசாயி பிரபாகரன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயி கிஷோர்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயத்தில் மகசூல் அதிகரிப்பதில் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனி வளர்ப்பில் உள்ள வழிமுறைகள், தேன் விற்பனையினால் கூடுதல் வருமானம் ஈட்டுதல் போன்றவற்றினை அவர்களின் அனுபவங்கள் மூலம் விவசாயிகளுக்கு தெளிவான விளக்கங்களை அளித்தனர். மேலும் தேனீ பெட்டிகளை கொண்டு செயல் விளக்கங்களையும் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சா. திருச்செல்வன், தோட்டக்கலை அலுவலர் ரம்யா, உதவி தோட்டக்கலை அலுவலர் வரதராஜன், செல்வகுமார், விநாயகமூர்த்தி, பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *