கும்பகோணத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கும்பகோணம் தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி.தெட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்துகொண்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக சொல்லி பாஜக அரசு ஏமாற்றுவதை ஒற்றைக் கல்லை கையில் எடுத்துக்கொண்டு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் 40 க்கு 40 தொகுதிகளையும் வெற்றி கண்ட ஒரே தலைவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் , முன்னாள் எம்பி ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன் மற்றும் திமுக மாநகரப் பகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *