கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி காட்டுயானை துரத்தியதில் படுகாயமடைந்த சந்திரன் வயது 62 என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார் அதைத்தொடர்ந்து தமிழக அரசு உத்தரவிற்கிணங்க தமிழக வனத்துறையினர் சார்பாக உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை ரூ.10 லட்சம் ( பத்து லட்சம்) ரூபாயிலிருந்து முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாயை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளனர் மேலும் மீதமுள்ள ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் இந்நிகழ்வின் போது வனத்துறையினர், முடீஸ் காவல் துறையினர் மற்றும் 17 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் வி.எம்.டி.மணிகண்டன் மற்றும் உறவினர்களும் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *