மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது
அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
அதன்படி புதன்கிழமையான இன்று (18.12.2024) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 07 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.