தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆப்தமிழ்நாடு துணை ஆசிரியர்
முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி கட்டிடத்தில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு துணைநிலை ஆளுநர் K.கைலாஷ்நாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் ந.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் R. செல்வம், அமைச்சர்கள் க. லட்சுமி நாராயணன், சாய் ஜெ சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பெ. ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் AKD ஆறுமுகம், கல்யாணசுந்தரம், KSP ரமேஷ், தட்சிணாமூர்த்தி, அசோக் பாபு ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.