தமிழ் நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் மதுரை மாவட்ட பேரவை கூட்டம், மதுரை மாவட்ட அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார், ஜெயபால் வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட பொருளாளர் வசந்த முனியம்மாள் வரவு செலவு அறிக்கைகள் தாக்கல் செய்தார், மாநிலத்தலைவர் ராஜசேகரன், மாநில பொருளாளர் பெரியசாமி மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்டத் தலைவர் இரா.தமிழ், வடக்கு வட்ட கிளைச் செயலர் முத்துவேல் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். மாநில பொதுச்செயலாளர் ஜெயபால், சிறப்புரை நிகழ்த்தினார்.


கோட்டச் செயலாளர் செந்தில் நன்றி கூறினார். கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்ட தலைவராக கார்த்திகா, மாவட்ட செயலாளராக ஜெயபால், மாவட்ட பொருளாளராக வசந்த முனியம் மாள், மாவட்ட இணை செயலாளராக முருகேஸ்வரி, திருமங்கலம் கோட்ட செயலாளராக செந்தில், மதுரை கோட்ட செயலாளராக ஸ்ரீகாந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *