தமிழ்நாடு செங்கொடி மக்கள் நல சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி தோழர் நல்லக்கண்ணு அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா விருத்தாசலத்தில் கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் தமிழ்நாடு செங்கொடி மக்கள் நல சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி தோழர் நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

செங்கொடி மக்கள் நல சங்க மாநில நிறுவன தலைவர் அறிவழகி தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் மாநில பொது செயலாளர் ராவண ராஜன் மாநில பொருளாளர் ராமச்சந்திரன் கடலூர் மாவட்ட செயலாளர் வெங்கடேசன். விருத்தாசலம் வடக்கு ஒன்றிய செயலாளர்அவர்கள் குணசேகரன் விருத்தாசலம் தொழிற்சங்க செங்கொடி கணேசன் ஒன்றிய செயலாளர் பச்சமுத்து தொழில் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன் மாதர் சங்க மாவட்ட செயலாளர் கலைவாணி. மகேஸ்வரி. இளையபெருமாள். சட்ட ஆலோசகர் பரமசிவம். ஆலோசகர் விஜய் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தோழர் நல்லகண்ணுவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *