தஞ்சாவூர் :கந்தர்வ கோட்டை வித்ய விகாஸ் பள்ளி காணொளி அரங்கில் இயற்கை மருத்துவ பயிற்சி முகாம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது
இம்முகாமை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் திருமதி வெண்ணிலா தலைமையேற்று துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தஞ்சை ஹீலர் எஸ் .பாலமுருகன் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பில் மனமே மருத்துவர்
உணவே மருந்து ,எல்லா வகை பிரச்சனைகளுக்கும் மனம் தான் முதன்மை காரணம். மனதைப் பக்குவப்படுத்தினால் உடல் ரீதியான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம் உணவு ,உணர்வு ,உடல் , -உயிர் என்ற நிலையில் நாம் உடலைப் பேணிக்காக்க முடியும் என்றார். பல்வேறு வியாதிகளுக்கு மருந்து இல்லாமல் குணப்படுத்தும் பயிற்சிகளை கொடுத்தார்கள். இதில் நூற்றுக்கு மேற்பட்ட இருபால் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் . இதில் பயிற்சி செய்முறைகளை ஆசிரிய பெருமக்கள் ஆர்வத்துடன் தொடர்ந்து 4 மணி நேரம் கேட்டதோடு தங்கள் உடல் ரீதியான பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் கேட்டு அறிந்தனர் . நிறைவில்
தமிழாசிரியர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்