சட்டசபை கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் :

கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் :பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வலியுறுத்தல் :

திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் இந்த நான்கு ஆண்டாக எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

கடந்த 2012 ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை பாடங்களில் மாணவர்கள் நலன் கருதி நியமிக்கப்பட்டார்கள்.

5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டு, பின்னர் சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ₹12,500 ரூபாய் வழங்கப்படுகிறது.13 ஆண்டுகளாக பணிபுரியும்போதும், இதுவரை மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி உள்பட அரசின் சலுகைகள் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கின்றார்கள்.

ஆகவே, பணிநிரந்தரம் செய்தால் மட்டுமே இனி எஞ்சி உள்ள காலத்தை நல்ல படியாக வாழ முடியும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.எனவே, மனிதாபிமானம் கொண்டு காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் தமிழக முதல்வர் அவர்கள் செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கையை அனைத்து கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாமக அறிக்கை வெளியாகி உள்ளது.

தவாக, கொமதேக மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய சட்டமன்றத்தில் வலியுறுத்தி உள்ளார்கள் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல் : 9487257203

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *