மங்கலம்பேட்டை பேரூராட்சியில்,எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது முழு திருவுருவை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன்.

எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்கலம்பேட்டை பேரூராட்சியில், அவரின் முழு திரு உருவ சிலைக்கு, கடலூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலைகள், அயர்ன் பாக்ஸ், மற்றும் இனிப்புடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர, ஒன்றிய பேரூர், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *