ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
பெரம்பலூரில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.
பெரம்பலூர்.ஜன.22. அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலோடு, இன்று பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில், கழக அமைப்புச் செயலாளர் வரகூர் அ. அருணாச்சலம் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையில் எவ்வாறு பாகப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் மற்றும்
இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை,
விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை நடக்க வேண்டும் மற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிச் செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.