கம்பம் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் ஆய்வு செய்த நகர் மன்ற தலைவர் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் ஆய்வு செய்தார்.

கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன மொத்தம் 300 க்கும் மேற்பட்ட தெருக்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப தெருக்கள் அதிகமாகி வீடுகளில் சேகரமாகும் கழிவு நீரை பொதுமக்களுக்கு எந்த ஒரு நோய் தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கும் விதமாக கழிவுநீரை சுத்தகரிப்பு செய்யும் நிலையம் அமைப்பதற்கு நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தை நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வழக்கறிஞர் துரை நெப்போலியன் நகராட்சி ஆணையாளர் உமாசங்கர் நகராட்சி பொறியாளர் அய்யனார் உதவி பொறியாளர் சந்தோஷ் குமார் சுகாதார அலுவலர் அரசகுமார் சுகாதார ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *