செங்குன்றம் செய்தியாளர்

புழல் பகுதியில் தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தவெக தலைவர் விஜய் உத்திரவிண்படி மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆலோசனையில், புழல் சைக்கிள் ஷாப் , மேட்டு தெருவில் த.வெ.க கட்சியின் மாதவரம் பகுதியின் சார்பில் , பாலாஜி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நலத்திட்ட உதவியாக பொதுமக்கள் ஏராளமானவர்களுக்கு அரிசி ,பாய், குடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


முன்னதாக மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சென்னை கிழக்கு மாவட்டம் மாதவரம் பகுதி மாணவர் அணி தலைவர், அம்பத்தூரை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நிர்வாகிகள் மவுன‌ அஞ்சலி செலுத்தினர். இதில் மாதவரம் 24வது வட்ட நிர்வாகிகள் விஜயகுமார், காரல் மார்க்ஸ்,செந்தமிழ், ராஜேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *