திருச்சிராப்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சென்னைக்கு செல்வதற்கும், சென்னையிலிருந்து திருச்சி வருவதற்கும் ராக்போர்ட் விரைவு வண்டியைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். திருச்சியில் முதலாவது நடைமேடையில் இருந்து புறப்பட்டுச் செல்கிறது

அதே போன்று சென்னையிலிருந்து திருச்சி வந்து சேரும் இரயில் 4ஆவது மற்றும் 8ஆவது நடைமேடைகளில் தற்போது வந்து சேர்கின்றது. இதனால், இந்த இரயிலில் பயணம் செய்யும் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள், இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்படுவதாக எனக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

திருச்சி இரயில்வே கோட்ட மேலாளர் P.அன்பழகன் சந்தித்த போது சென்னையிலிருந்து திருச்சி வந்து சேரும் 12653 ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் இரயிலை முதலாவது நடைமேடையில் நிறுத்தி, பயணிகளின் சிரமங்களை தீர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். DRM அன்பழகன் நிறைவேற்றித் தருவதாக தெரிவித்தார். நமது கோரிக்கையினை ஏற்று கொண்ட DRM-க்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *