தஞ்சாவூர். பிப்- 2. தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. திருவையாறு சட்டமனி உறுப்பினர் துரை.சந்திரசேகரன் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர்டி. கே .ஜி . நீலமேகம், கோட்டாட்சியர் இலக்கியா ஒன்றிய செயலாளர் அருளானந்த சாமி ஆகியோர் உறுதிமொழி வாசித்து தொடக்கி வைத்தனர்.

தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவதையொட்டி நேற்று
ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சாவூர் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் வாசித்து தொடக்கி வைத்தனர். இதை விழா குழு தலைவர் பொறியாளர் சௌரிராஜ், செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ், பொருளாளர் சூசைராஜ், வல்லம் டி.எஸ்.பி.கணேஷ்குமார் ஆகியோர்
உறுதி மொழி வாசிக்க மாடுபிடி வீரர்களும் உறுதிமொழி வாசித்து ஏற்றுக்கொண்டனர்

தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 657 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்து விடப்பட்டன. காளைகளைப் பிடிக்க மொத்தம் 358 போ் அனுமதிக்கப்பட்டனா். இவா்கள் 5 பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவாகக் களமிறக்கப்பட்டனா். மாடு பிடிக்கும் போது வீரா்கள் தடுமாறி கீழே விழுந்தால் காயம் ஏற்படாத வகையில் வாடிவாசலிலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவுக்குத் தேங்காய் நாா் போடப்பட்டு இருந்தது.

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள், சில்வா் அண்டா ஆதியவை பரிசுகளாக வழங்கப்பட்டன. இதேபோல் பிடிப்படாத மாடுகளுக்கான பரிசுகள் மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

முன்னதாக, மாடு பிடி வீரா்களைச் சுகாதாரத் துறையைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் உடல் நலம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் பிறகு தகுதியானவா்கள் மட்டுமே களத்துக்குள் செல்ல அனுமதித்தனா். இதேபோல, மாடுகளை கால்நடைப் பராமரிப்புத் துறையினா் பரிசோதனை செய்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி.ராஜாராமன் உத்தரவின் பேரில் வல்லம் டி.எஸ்.பி., கணேஷ் குமார் தலைமையில் 400க்கும் அதிகமான போலீசார் மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *