தாராபுரம் அருகே உள்ள பெரமியம் அருள்மிகு ஸ்ரீ மஹாகணபதி,அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன்,அருள்மிகு ஸ்ரீ முனியப்பசுவாமி,அருள்மிகு ஸ்ரீ மாகாளி அம்மன் திருக்கோவில் ஆகிய நான்கு தெய்வங்களுக்கு சபரிவார புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்: 1000, கணக்கான பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து தெய்வங்களை வழிபட்டனர்.

திருப்பூர் மாவட்டம். தாராபுரம் அருகே உள்ள பெரமியம் அருள்மிகு ஸ்ரீ மஹாகணபதி,அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன்,
அருள்மிகு ஸ்ரீ முனியப்பசுவாமி,அருள்மிகு ஸ்ரீ மாகாளி அம்மன் திருக்கோவில் சபரிவார புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது.

இந்த விழாவானது 200,ஆண்டுகள் பழமையான வரலாற்று புகழ் பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் புனராவர்த்தன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா 21. ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியுடன்

கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு முதலில் அருள்மிகு ஸ்ரீ மஹாகணபதி,கும்பாபிஷேகம் அதன் பிறகு.அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ முனியப்பசுவாமி,அருள்மிகு ஸ்ரீ மாகாளி அம்மன் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் மோட்டார் மூலம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது. இதில் கரையூர்,மூலனூர், தாராபுரம், கொளத்துப்பாளையம், கன்னிவாடி, ஆத்துக்கால் புதூர், முத்தூர், வெள்ளகோவில்.மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1000, கணக்கான பக்தர்கள் திரளாக திரண்டு வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

அதன் பிறகு பரிவார தெய்வங்களுக்கு சந்தனம், பால், நெய், மஞ்சள், இளநீர், உள்ளிட்ட ஏழு வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேக ஆராதனையும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

பிறகு கோமாதா பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் இளைஞர் அணியினர் ஆகியோர் இணைந்து
சுவாமி ஆலய அட்சர்கள் மற்றும் சிவாச்சாரியார் லக்கமா நாயக்கன்பட்டி செந்தில்நாதன்
ஆகியோர் விழா விற்கான எற்பாடுகளை செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *