மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்ளிவேலிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் மற்றும் விஜய விநாயகர், நவகிரக சன்னதிகளில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில் நான்கு கால யாகபூஜை உள்ளிட்ட கோமாதா பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து புனித நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் தக்கார் மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *